விண்கற்களை பூமி கடக்கும் அரிய நிகழ்வு

முகப்பு > செய்திகள் > வேடிக்கையான செய்திகள்
By |

இந்த வால் நட்சத்திரத்தின் உடைந்த பாகங்கள் டாவ் ஹெர்குலிட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இந்த உடைந்த பாகங்கள் மணிக்கு 1,000 விண்கற்களை மழையாக பொழிய கூடும் என சில வானியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ஆனால், மற்றவர்கள் அதனை உறுதியாக கூறவில்லை. இதுவரை 68 துண்டுகளாக இந்த வால் நட்சத்திரம் உடைந்து உள்ளது என கூறப்படுகிறது. சரி. இந்த விண்கற்களை நாம் எப்போது காண முடியும்? என்பது பற்றி நாசா விளக்கம் அளித்து உள்ளது. மே 30ந்தேதி (இன்று) இரவில் இருந்து மே 31ந்தேதி (நாளை) அதிகாலைக்குள் வால் நட்சத்திரத்தின் உடைந்த பாகங்களை பூமி கடந்து செல்லும். இந்த பாகங்கள் மிக விரைவாக வெளியே தள்ளப்படும்போது, பூமிக்கு அருகே வந்து, எரிகல் மழையை நாம் காண கூடும். எனினும், இதனை இந்தியாவில் காண முடியாது. வடஅமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே காண முடியும். தெளிவான, இருண்ட வானில் வடஅமெரிக்க வானியலாளர்கள் டாவ் ஹெர்குலிட் மழையை காணும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். இதன்படி, கிழக்கு கடற்கரை பகுதியில் அதிகாலை 1 மணியளவிலும், மேற்கு கடற்கரையில் இரவு 10 மணியளவிலும் இதனை காண முடியும்.

விண்கற்களை பூமி கடக்கும் அரிய நிகழ்வு

மற்ற செய்திகள்