IPL AUCTION: கோலாகலமாக தொடங்கி சூடு பிடித்த ஐபிஎல் ஏலம்! 10 அணிகளும் மும்முரம்... முழு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு: ஐபில் ஏலம் கோலாகலமாக பெங்களூருவில் தொடங்கி உள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் 2022 இல் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன, இதுவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), டெல்லி கேப்பிடல்ஸ் (DC), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), மும்பை இந்தியன்ஸ் (MI), பஞ்சாப் கிங்ஸ் (PBKS), ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஆகிய 8 அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)  இந்த ஆண்டு ஐபிஎல்லில் லக்னோ மற்றும் அகமதாபாத் வடிவத்தில் இரண்டு புதிய உரிமையாளர்களை வாரியம் சேர்த்தது.

ஐபிஎல் 2022 க்கான இரண்டு புதிய உரிமையாளர்களுக்கான மின்னணு ஏல செயல்முறையின் மூலம் வெளிப்படையாக செய்யப்பட்டது, இதில் ஐபிஎல் 2016 மற்றும் ஐபிஎல் 2017ல் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளராக இருந்த சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான RPSG குழு, லக்னோ அணி உரிமையை வாங்கியது. அந்த அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்று பெயரிட்டனர்.

ஐபிஎல் 2022க்காக, அகமதாபாத் அணியின் உரிமையானது  CVC கேபிடல் குழுவால் ஏலம் எடுக்கப்பட்டது, இந்த குழுமம் பல ஆண்டுகளாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் முதலீடுகளைக் கொண்டுள்ளது. ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) என அழைக்கப்படும்.

ஐபிஎல் 2022, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக மொத்தம் 10 அணிகளுடன் 74 போட்டிகள் நடத்தபட உள்ளன. இந்தியாவில் மோசமான COVID-19 நிலைமை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு போட்டியை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர பிசிசிஐ முழுத் தயாராக உள்ளது. 

ஐபிஎல் ஏலம் 2022 பெங்களூரில் இன்றும் (பிப்ரவரி 12) நாளையும் (பிப்ரவரி 13) நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு ஏலம் தொடங்கி உள்ளது. 10 வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த அனைத்து அணி அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர், 2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, பிசிசிஐ அனைத்து உரிமையாளர்களுக்கும் வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான சில விதிகளை அமைத்தது. ஒவ்வொரு 10 அணிகளுக்கும் தங்களின் அணிகளை உருவாக்க 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

விதிகளின்படி, தற்போதுள்ள ஐபிஎல் அமைப்பைச் சேர்ந்த அனைத்து 8 அணிகளும் ஏலத்திற்கு முன்னதாக அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், ஒவ்வொரு அணியும் 3 இந்திய வீரர்களுக்கு மிகாமல் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் தக்கவைத்துக் கொள்ளக்கூடாது.  8 பழைய அணிகள் வெளியேற்றிய வீரர்களில் இருந்து 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள 2 புதிய அணிகளுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. 

கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருடன் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரை ஐபிஎல் ஏலம் 2022 க்கு முன்னதாக தக்கவைத்தது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022ல் ராகுலை கேப்டனாக லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியும் கேபடனாக அறிவித்தது.

பிசிசிஐ வகுத்துள்ள விதிகளின்படி, 2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக உரிமையாளர்கள் தக்கவைத்துக் கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் 90 கோடி ரூபாயில் பின்வரும் செலவுகள் செய்யப்பட்டன.

ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால்

தக்கவைப்பதற்கான மொத்த செலவு: ரூ 42 கோடி

வீரர் 1: ரூ 16 கோடி

வீரர் 2: ரூ 12 கோடி

வீரர் 3: ரூ. 8 கோடி

வீரர் 4: ரூ. 6 கோடி

ஒரு அணி 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால்

தக்கவைப்பதற்கான மொத்த செலவு: ரூ.33 கோடி

வீரர் 1: ரூ 15 கோடி

வீரர் 2: ரூ 11 கோடி

வீரர் 3: ரூ. 7 கோடி

ஒரு அணி 2 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால்

தக்கவைப்பதற்கான மொத்த செலவு: ரூ 24 கோடி

வீரர் 1: ரூ 14 கோடி

வீரர் 2: ரூ. 10 கோடி

ஒரு அணி 1 வீரரை தக்க வைத்துக் கொண்டால்

வீரர்: ரூ 14 கோடி

மேலும், முதன்முறையாக, 2022 ஐபிஎல் ஏலத்தில் உரிமையாளர்களை ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) கார்டு வைத்திருக்க பிசிசிஐ அனுமதிக்கவில்லை.

ADMK, SS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்